நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கான பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி

250 0

நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கான பாடசாலை ஒன்றை இந்த வருடத்துக்குள் ஆரம்பிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த பாடசாலையை நிர்மானிக்க உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.