தெற்கில் பாதாள உலகக் குழுவின் பிரபல தலைவரான மதுஸ என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞர், கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால், காவல்துறை பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்துக்குரியவரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, அவர் மதுஸ அல்ல என கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்தே அவர் விடுவிக்கப்பட்டதாக குற்ற புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீதான துப்பாக்கிச் சூட்டில், சமயங் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன், மதுஸ என்பவருக்கு தொடர்புள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதற்கமைய மதுஸ என்பவரைப் போன்ற தோற்றமுடைய குறித்த இளைஞன் நேற்று கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.