பஸ்களுக்கு தனியான போக்குவரத்து அலகு

241 0

கொழும்பில் அதிகரித்து வரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு அமைவாக அடுத்த வாரம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் பிரதான வீதிகளின் பஸ்களுக்கான தனியான போக்குவரத்து அலகு ஒன்று வேறுபடுத்தப்படவுள்ளது.

இதனூடாக பஸ்களில் பயணிக்கும் பிரயாணிகளின் தொகையினை அதிகரித்து பொது போக்குவரத்துச் சேவைகளை ஊக்குவிக்க முடியுமென பெருநகர திட்டமிடல் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக தெரிவித்தார்.

பத்தரமுல்லை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்