விமலின் பிணை மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி

253 0

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பிணை மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிணை வழங்குமாறு விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்வைத்த மீள் திருத்த பிணை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.