நானுஓயா கிளாசோ தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

230 0

நுவரெலிய மாவட்டம் நானுஓயா கிளாசோ தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தினை சேர்ந்த 300இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தில் உள்ள தோட்ட வைத்திய அதிகாரியை தோட்டத்தைவிட்டு இடமாற்றம் செய்யுமாறு கோரி, கிளாசோ தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தில் கடமையாற்றும் தோட்ட வைத்திய அதிகாரி முறையாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லையெனவும் இதனால் தாங்கள் சுகாதார விடயத்தில் அதிகமான பாதிப்புகளை சந்திப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.