கொழும்பில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பரபரப்பு

149 0

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 14 வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை கொழும்பு பொரளைப் பகுதியில் காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,  மற்றுமொரு குழுவினர் பதாதைகளை ஏந்தியவாறு நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை குழப்பும் முகமாக செயற்பட்டனர்.

இதன் போது ‘புலிகளின் நினைவேந்தல் வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

இதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை அதிகரித்த நிலையில், பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

வடக்குகிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழப்ப நிலை காரணமாக பொரளை சுற்றுவட்டத்திற்கு அருகில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.