இளைஞர் யுவதிகளை நாட்டின் அபிவிருத்தியில் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
தற்போது ஆடைத்துறையில் இருந்து தொழில்நுட்பத்துறையை நோக்கி நகர வேண்டிய நிலை இருக்கிறது.
இதனால் தொழில்வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்று சிலரிடம் அச்சம் இருக்கிறது.
ஆனால் இதில் தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தொழில்நுட்பத்துறையை பெருக்கிக் கொண்டதாலேயே முன்னேற்றம் அடைந்துள்ளன என்று பிரதமர் கூறியுள்ளார்.

