ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து வெளியேற விரும்பவில்லை- மஹிந்த அமரவீர

225 0
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து வெளியேற தாம் விரும்பவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள், கூட்டமைப்பில் இருந்து வெளியேற விரும்பும் பட்சத்தில், அந்த கட்சியின் ஐந்து உறுப்பினர்களும் தனித்தனியாக கடிதங்களை வழங்க வேண்டும் என மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் சபாநாயகருக்கும் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து தேசிய சுதந்திர முன்னணி வெளியேறுவதாக, கட்சியின் தலைவர் விமல் வீரவங்ச, கடந்த 23ஆம் திகதி கூட்டமைப்பின் பொதுச் செயலாளருக்கு கடிதம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.