நானுஓயா – கிளாசோ ஆற்றில் நேற்று மாலை நீராட சென்று காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்பு

257 0

நானுஓயா – கிளாசோ ஆற்றில் நேற்று மாலை நீராட சென்று சுழியொன்றில் சிக்குண்டு காணாமல் போன இளைஞரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் நுவரெலிய – ஒலிபன்ட் தோட்டத்தை சேர்ந்த 17 வயதான சரவணகுமார் ஸ்ரீநாத் என்ற இளைஞர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

நுவரெலிய கடற்படை முகாமின் சுழியோடிகளினால் காவற்துறை மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நுவரெலிய பொது மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.