தமிழக மீனவர்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர், மோடி அரசாங்கத்தின் மீது அதிர்ப்தி

248 0

தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் கே.பழனிச்சாமி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு இலங்கையின் கடற்படையினரால் 32 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது இலங்கையில் 85 தமிழக மீனவர்களுடன், 128 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இவர்களை விடுவிக்கும் நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என தமிழக முதல்வர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏற்கனவே, தாம் இது தொடர்பில் அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனவும் தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி குறை கூறியுள்ளார்.