இந்தோனேசியா சென்றார் ஜனாதிபதி

234 0

இந்தோனேசியாவில் நாளைய தினம் இடம்பெறவுள்ள இந்த சமுத்திர வலய நாடுகளின் அரச தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தோனேசியா நோக்கி பயணமானார்.

இன்று காலை 7.35 மணியளவில் இந்தோனேசியாவின் ஜகர்தா நகர் நோக்கி புறப்பட்டுச் சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர வலய நாடுகளின் அபிவிருத்தியை குறிக்கோளாக கொண்டு இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்து சமுத்திர வலய நாடுகளின் சமாதானத்தை நிலைநாட்டுதல், நிலையான மற்றும் பரிபூரணமான வலமாக விருத்திசெய்தல் என்ற தொணிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.