33வது முறையாக பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

276 0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவருக்கு 33வது முறையாகவும் இன்று மீண்டும் விளக்க மறியல் நீடிக்கப்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் பிள்ளையான் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்திவிட்டார்.

2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதியன்று நத்தார் ஆராணையின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் உள்ளிட்ட மூன்று பேர், கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.