இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து உருவாக்கிய அரசாங்கத்தினால் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே.வி.பி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் அடுத்தடுத்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களே ஆட்சியை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த இரண்டு தரப்புகளும் இணைந்து புதிதாக ஆட்சி ஒன்றை நிறுவியுள்ளனர்.
அவர்கள் தற்போது வழமைபோலே தமது ஆட்சி முறையினை தொடர்வதாகவும் டில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.