பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நாடொன்றை கட்டியெழுப்ப தொழிநுட்ப வளர்ச்சி அவசியம் – பிரதமர்

220 0

பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு இலங்கையில் தொழிநுட்பம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகள் தமது தேவைக்கு ஏற்ப தொழிநுட்பம் உட்பட்ட துறைகளை விருத்தி செய்துகொள்வதுண்டு.

அதுவே நாடு பொருளாதாரத்தில் விருத்தி பெறுவதற்கு உந்துசக்தியாக அமைகின்றது.

இந்தநிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அத்தகைய நடமுறைகளை கையாள்வது அவசியமாவதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.