பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களாக இருந்தாலும், ஆட்சியமைப்பதற்கு அவர்களுக்கும் திறமை இருக்கின்றது -மஹிந்த

241 0

பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களாக இருந்தாலும், ஆட்சியமைப்பதற்கு அவர்களுக்கும் திறமை இருக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறைச்சாலை பஸ்ஸின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ரணாலே சமயங் என்றழைக்கப்படும் அருண உதயசாந்த என்பவர் மரணமடைந்தார்.   அவராக இருந்தாலும் தற்போதைய நிலைமையில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியமைப்பதற்கும் திறமை இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.   நாட்டில் இடம்பெறுகின்ற சகல சம்பவங்கள் தொடர்பிலும் ஆட்சியாளர் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

எந்தவொரு சம்பவத்தையும் அடுத்தநாள் பத்திரிகையில் தெரிந்துகொள்வதற்கு ஆட்சியாளருக்கு பொருத்தமில்லாத ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.    பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் இருந்தால், நாட்டை நிர்வகிக்கமுடியும் என்று பலரும் நம்பி, அதனையே நோக்கமாக கொண்டிருக்கின்றனர். எனினும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார் –