ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நலனை கருத்திற் கொண்டு அதன் தலைவர்கள் ஒன்றிணைந்த செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன முன்வைத்துள்ளார்.
நாடு தொடர்பாக சிந்தித்து அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
ஒற்றுமையின் மூலமே சிறந்த அபிவிருத்தி காற்றை நாட்டு மக்கள் சுவாசிக்க முடியும் என முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன தெரிவித்தார்.
பிரிவினை அழிவையே ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.