யாழ் – சிறை கைதிகள் 18 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

325 0

prisoners-415x260யாழ்ப்பாண சிறைச்சாலையை சேர்ந்த 18 கைதிகள்; உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருள் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் செய்யப்பட்டவர்களே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் டி.எம் உப்புல்தெனிய தெரிவித்தார்

தங்களை பிணையில் விடுவிக்குமாறு கோரியே இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை 18 கைதிகளும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.