காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நாயகத்தின் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று மாலை இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளர்.
சம்பவத்தில் காயமடைந்த மாவட்ட பணிப்பாளர் நாயகம் விமலராஜ் நேசன் சிகிச்சையின் பொருட்டு மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.

