இலங்கை நிலைபேறுதகு அபிவிருத்தி சட்டமூலம்

242 0

இலங்கை நிலைபேறுதகு அபிவிருத்தி சட்டமூலம் தொடர்பான மாகாண சபைகளின் நிலைப்பாட்டை சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு திருத்தமொன்று கொண்டுவரப்படும் வரை குறித்த சட்டமூலம் தொடர்பான பரிசீலனையை தாமதப்படுத்துவதாக கிழக்கு மாகாண சபை அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

இந்த சட்டமூலத்துக்கு வட மத்திய மாகாண சபையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, வடமேல், சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா ஆகிய மாகாண சபைகள் சட்ட மூலத்தை பரிசீலித்து, திருத்தங்களுக்கு உட்பட்டு தமது உடன்பாட்டை தெரிவித்துள்ளன.

வட மாகாணசபை இந்த சட்டமூலத்திற்கு தமது உடன்பாட்டை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், மாகாண சபைகளிடமும் பெறப்பட்ட அபிப்பிராயங்கள் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருக்கும் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவிற்கும் ஆற்றுப்படுத்தப்படும என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.