கட்டுகுருந்த படகு விபத்து – பலி 15ஆக உயர்வு – சிறுமி ஒருவரை தொடர்ந்தும் காணவில்லை

252 0

களுத்துறை – கட்டுக்குருந்த கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல் போயிருந்த 23 வயதான யுவதி ஒருவரின் உடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

பேருவளை – மருதானை கடற்பகுதியில் இருந்து இன்று மதியம் ஒருமணியளவில் குறித்த உடலம் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் குறித்த யுவதியின் கணவரது உடலம் பேருவளை கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

இதனிடையே படகு விபத்தால் காணாமல் போயிருந்த 7 வயதான சிறுவனின் உடலம் இன்று பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்டுக்குருந்த படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குறித்த படகு விபத்தில் காணாமல் போன மேலும் ஒரு சிறுமி தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.