இன்னல்களுக்கு உள்ளான மேலும் 122 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்.

238 0

குவைட் ராஜ்ஜியத்துக்கு தொழிலுக்காக சென்று பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்த 122 பெண்கள் இன்று மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

குவைட்டில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயத்துக்குட்பட்ட பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 44 பேரும், சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த 78 பெண்களும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.