கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தடை ஆளுனர் இல்லை, மத்திய அரசாங்கமே என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கிழக்கு மாகாண சபையில் ஊடவியளாளர்களின் சந்திப்பொன்று இடம் பெற்றது அங்கு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஆளுநரின் தலையீட்டை விட மத்திய அரசாங்கமே தடையாக உள்ளது.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பீரிமா மா ஆலை மற்றும் டோக்கியோ சீமேந்து நிறுவனம் ஆகியவை தவிர கடந்த 30 வருடகாலத்தில் எந்தவொரு பாரிய முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை, காரணம் கொழும்பில் உள்ள முதலீட்டு சபையே.
மற்றும் எந்தவொரு பெரிய முதலீடுகளுக்கும் முதலீட்டு சபையானது சரியான ஒத்துழைப்பையே ஊக்கவிப்போ வழங்குவது இல்லை.
நாங்கள் தனிப்பட்ட ரீதியில் மாகாண மட்டத்தில் முதலீட்டுத்திட்டங்களை உள்வாங்கியபோதும், உதாரணமாக ஒரு உல்லாசபயணிகளின் ஹேட்டல் நிர்மாணிப்பதற்கு 17 அனுமதிகளை பெறவேண்டி உள்ளது.
அவ் அனுமதிகளை பெற முதலீட்டாளர் அலைந்து கலைத்துபோன சம்பவங்களே அதிகம், ஆகவே நாட்டின் முதலீட்டு சட்டம் மாற்றப்படவேண்டும்.
இதனால் நாங்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், முதலீட்டு சபைக்கு பொருப்பான அமைச்சர் மலிக் சமரசிங்கவிடமும் கிழக்கு மாகாணத்திற்கு விஸேட முதலீட்டு அனுமதியை கேட்டு உள்ளோம் எனவும், அவ்வனுமதி கிடைக்கும்பட்சத்தில் கிழக்கு மாகாணத்தில் பல பாரிய அவிபிருத்தி திட்டங்களை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

