கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள 5ஆயிரம் இந்தியர்கள் பதிவு

227 0

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு முன்னெப்போதுமில்லாதவகையில் 5ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராமேஸ்வரத்திலிருந்து 2ஆயிரம் பக்தர்கள் உட்பட மொத்தம் 5ஆயிரத்து பதினைந்து இந்தியர்கள் இதுவரை பதிவுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா எதிர்வரும் 12, 13ஆம் நாட்களில் நடைபெறவுள்ளது.

இத்தேவாலயம் புதிதாகக் கட்டப்பட்டு கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.