கைக்குண்டு மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு பேர் கைது

216 0

கைக்குண்டு மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு இளைஞர்கள் எல்பிட்டிய, திவிதுரவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து வௌிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு ஒன்றும் உள்நாட்டு தயாரிப்பான 09 மில்லி மீட்டர் வகை துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களால் எல்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 21 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.