அரசியலமைப்பு சட்ட நிர்ணய உப குழுவில் இருந்து கூட்டு எதிர்க்கட்சி விலகி இருப்பது சாதகமாக அமையும் என்று பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறினார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் நாட்டின் அனைத்து செயற்பாடுகளில் இருந்து விலகி இருப்பது நாட்டுக்கு சிறந்தது என்று அவர் கூறியுள்ளார்.
களனி பிரதேச செயலக வலயத்தில் கலாச்சார மத்திய நிலையம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.