கம்மன்பிலவிற்கு எதிராக அவமதிப்பு வழக்கு-ரவி கருணாநாயக்க

231 0

பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கொன்றை தொடுக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த பாதீட்டின் ஊடாக இலங்கை சுங்கத் திணைக்களத்துக்கு 25 ஆயிரம் மில்லியன் ருபா வருமானத்தை நிதி அமைச்சர் இல்லாமல் செய்யதாக ‘சிறந்த பத்து’ முறைப்பாட்டின்கீழ், 8 ஆவது முறைப்பாட்டை நேற்று தாக்கல் செய்த  உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருந்து தெரிவித்த நிதி அமைச்சர் , இந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் , ஊடகங்களின் முன்னால் எவ்வித கேள்விகளுக்கும் தான் பதிலளிக்க தயார் எனவும் தெரிவித்திருந்தார்.