சுமித் பெரேரா மீண்டும் விளக்கமறியலில்

237 0

மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டிருப்பினும் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாரஹேன்பிட காவற்துறை குற்றவியல் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவானால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அது, குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவானால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேல் நீதிமன்றத்தின் பிணை உத்தரவு நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைத்திருக்காத காரணத்தினாலாகும்.

கடந்த 9 மாதங்களாக விளக்கமறியலில் இருக்கும் அவர் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த பிணை மனுவின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் , சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவும் எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.