பசியால இளைஞர் கொலை – மேலும் 6 பேர் கைது

289 0

பசியால பிரதேசத்தில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டு வரக்காபொல எதினாவெல பிரதேசத்தில் வீசி எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஆறு பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் நான்கு பேர் கொலையுடன் தொடர்பில்லாதவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பசியால பிரதேசத்தில் தொழில்புரிந்துவந்த 32 வயது இளைஞர் ஒருவர் எதினாவெல பிரதேசத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை உடலமாக மீட்கப்பட்டார்.

பசியால பிரதேசத்தில் இருந்து தமது சொந்த ஊரான கட்டுகஸ்தோட்டைக்கு விடுமுறைக்காக குறித்த சென்ற இளைஞர் திருடர் என சந்தேகிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.