அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் 2020இல் – டிலான் பெரேரா

246 0

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் 2020இல் தொடக்கிவைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹாலியெல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை வெளியேறுமாறு வலியுறுத்துவதாக தெரிவித்த டிலான் பெரேரா எவ்வாறெனினும் 2017ஆம் ஆண்டில் ஆட்சியை கவிழ்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.