பிரான்ஸ் நாட்டவர்களுக்கு இலங்கையில் சிறை

279 0

தொடருந்து பெட்டிகளில் கிறுக்கிய குற்றத்திற்காக இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் காலி தொடருந்து நிலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்துள்ளதுடன், தொடருந்தின் பயணிகள் பெட்டியில் சித்திரங்களை வரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சுமார் 64 ஆயிரம் ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதவானிடம் அறிவித்துள்ளனர்.

இவர்கள் கடந்த சனிக்கிழமை காலி முதன்மை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் வரை சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.