இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில்

238 0

இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதற்கான பேச்சுவாத்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பங்களாதேஷ் வர்த்தகத்துறை அமைச்சர் டொபாய்ல் அகமட் தெரிவித்தார்.

குறித்த உடன்படிக்கை தற்போது செயலாளர்கள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுவருவதாக பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருடனான நேற்றைய சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார்.

பங்களாதேஷிய உற்பத்திகளை மூன்று தினங்களுக்கு கொழும்பு துறைமுகத்தில் தரித்து வைப்பது தொடர்பிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் மருந்துப்பொருட்கள் மற்றும் சீPமெந்து ஆகிய பொருட்களை குறைந்த வரியில் பங்களாதேஷில் இருந்து ஏற்றுமதிசெய்ய முடியும் பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த திறந்த வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பரிமாறல்கள் அதிகரிக்கும் என இலங்கை உயர்ஸ்தானிகர் குணசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.