பாதையில் சென்றவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

364 0

வெல்லவாய, திஸ்ஸ வீதியிலுள்ள, சீ.ஜி.எம். மாவத்தையில் வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் மொனராகலை பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு பாதையில் இடம் தராமல் சென்றதாக தெரிவித்தே குறித்து பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடாத்தியதாக வாகனத்தின் சென்ற நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதலுக்குட்பட்ட நபர் வெல்லவாய அரச ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.