வடக்கு மக்கள் சமஷ்டியில் ஆர்வம் காட்டவில்லை – லால் விஜேநாயக்க

390 0

Lal-Wijenayakeவடக்கு மக்கள் சமஷ்டித் தீர்வில் ஆர்வம் காட்டவில்லையென அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டவாளர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

விசும்பாயவில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக எமது குழுவானது வடக்கில் மேற்கொண்ட ஆய்வின்படி, வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் மாத்திரமே சமஷ்டித் தீர்வில் ஆர்வம் காட்டி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

வடக்கிலுள்ள பெரும்பாலான மக்கள் ஒற்றையாட்சிக்கே ஆதரவளித்துள்ளனர்.

மேலும், தேச வழமைச் சட்டத்தினால் வடக்கிலுள்ள பல பெண்கள் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். அத்துடன் கணவன் காணாமற் போன பெண்கள் தமது சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுப்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.