நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை

248 0

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அரசாங்கம் பிற்போடுவதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் நேற்று ஊடகங்களை சந்தித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்கள் தற்போது செயலிழந்து காணப்படுகின்றன.

இந்த நிலையில், தேர்தல் பிற்போடப்பட்டு வருகின்றது.

இதனால் நிதி, வாகனங்கள் என்பன வேறு வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வாழ்க்கைச் சுமையை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமையே தற்போதுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.