அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற துறைக நகர துறைமுகங்களை சுதந்திர துறைமுகங்களாக மாற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
குறித்த துறைமுகங்களில் தீர்வை வரியற்ற கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் சுதந்திர துறைமுகமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என ஆராய்வதற்காக பிரதமரின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கத்தின் தலைமைத்துவத்தில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
Porto Franco என அடையாளப்படுத்தும் இந்த துறைமுகத்தினுள் வேறு இடங்களுக்காக அனுப்பப்படும் பொருட்களுக்கு வரி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.