இந்தியாவுடனான உறவுகள் நல்ல நிலையில் உள்ளன- சித்ராங்கனி வாகீஸ்வரா

230 0

இந்தியாவுடனான உறவுகள் நல்ல நிலையில் இருப்பதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திரத்தின நிகழ்விலேயே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வில் இந்திய வெளியுறவு ராஜாங்க அமைச்சர் எம் ஜே அக்பர், வெளியுறவு செயலர் எஸ் ஜெய்சங்கர் உட்பட்டோர் பங்கேற்றனர்.