முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த பிரயத்தனம் செய்வதாக, அக் கட்சியின் மிரிஹான ஆசன அமைப்பாளர் சங்ஜய சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெரும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்