மோடிக்கு பன்னீர் செல்வம் கடிதம்

276 0

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழக காபந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

நேற்றையதினம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி தற்போது இலங்கையில் 35 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் 120 படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறு இந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.