யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

250 0

 

யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்க கோரி யாழ்.மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன் 09 நபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.