ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம்(காணொளி)

234 0

 

ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துவைத்தார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் கொண்டாட்டம் மற்றும் உலக பௌத்த மாநாட்டை முன்னிட்டு உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த இணையத்தளம் சர்வதேச வெசாக் நிகழ்வு தொடர்பான அனைத்து விடயங்களும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

சமூக நியாயம் மற்றும் பேண்தகு உலக அமைதிக்கான பௌத்த கற்பித்தல் எனும் தொனிப்பொருளில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை இலங்கையில் சர்வதேச வெசாக் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.