நாட்டின் பிரச்சினைகளை மறக்க அரசாங்கம் முயற்சி – மஹிந்த

242 0

நாட்டின் பிரச்சினைகளை மறப்பதற்காகவே அரசாங்கம் அனைத்தையும் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்காமல் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரை அண்மையில் சந்தித்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.