நீரைப் பெற்றுக் கொடுக்க நிதி சேகரிக்கவேண்டிய நிலை – ரணில்

252 0

மக்களுக்கு நீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக நிதி சேகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகப பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 50 சதீவீதமான மக்களுக்கு மாத்திரமே நீர் விநியோகிக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.