அரசியல் அமைப்பின் மூலம் இந்த சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதுடன், பல்வேறு வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட மத ரீதியான முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் அமைப்பு எதற்காக என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
அரசியல் அமைப்பின் மூலமே சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியும்.
இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.