மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளது – ஜனாதிபதி

241 0

மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்றபோது அனைத்து இனங்களும் ஒற்றுமையுடன் இருந்தன.

அந்த ஒற்றுமை படிப்படியாக சீர்குலைந்தது.

கட்சி அரசியலே அதற்கு பிரதான காரணமாகும்.

இன்று பிரிவினைக்கு வழிவகுக்கும் வகையிலேயே பெரும்பாலான கட்சிகள் பதிவுசெய்யப்படுகின்றன.

இவ்வாறு பதிவுசெய்யப்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது.

இந்தப் பிரிவினையின் காரணமாகத்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.