அதிக விலையில் அரிசி – விற்பனை நிலையங்களை சுற்றிவளைக்க உத்தரவு

256 0

அதிக விலையில் அரிசியினை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களை சுற்றிவளைக்க நுகர்வோர் விவகார சபைக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அரிசி இறக்குமதி வரியினை குறைத்துள்ளதன் காரணமாக  ஒரு கிலோ அரிசியினை 66 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் , அரிசி விற்பனையாளர்கள் எவரும் குறித்த விலைக்கு அரிசியினை விற்பனை செய்ய வில்லை என அமைச்சர் ரிஷார் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.