அறிவுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

260 0

9வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அமைச்சு ஒன்றை ஏற்படுத்தி அது அரசின் தலைவருக்கு ஒதுக்கப்பட்டமையானது , அனைவருக்கும் சமமான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அறிவை பெற்றுக்கொடுப்பதற்கான கடமையை நிறைவேற்றும் போது குழந்தைகள் மற்றும் சமூகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.