மேன் பவர் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்காக தடையுத்தரவு நீடிப்பு

256 0

மேன் பவர் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்திற்கு வௌியிட்டிருந்த தடையுத்தரவு எதிர்வரும் 16ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நிரந்தர சேவைக்கு இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து , மேன் பவர் ஊழியர்கள் குழுவொன்று கடந்த மாதம் 26ம் திகதியில் இருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இன்று முற்பகல் மேன்பவர் ஊழியர்கள் சிலர் நீதிமன்ற வளாகத்தில் அமைதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

மேன்பவர் ஊழியர்களை நிரந்தர சேவைக்கு இணைத்துக் கொள்ளுமாறு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று எதிர்ப்பு பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தன.