இந்தியா நாட்டுக்கு சொந்தமான ஏயர் இந்தியா விமான சேவையின் பெண் விமானி ஒருவர் மதுபான சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.
இந்திய செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.
இதனால் 3 மாதங்களுக்கு அவரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இவரின் பணியாளர் தொகுதியில் மேலும் ஒருவரும் இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து ராஜ்கோட் நோக்கி பயணிக்கவிருந்த விமானத்தின் பெண் விமானி ஒருவரே இவ்வாறு மதுபான சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.

