சரத் குமார குணரத்னவின் மருமகனுக்கு பிணை

282 0

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு வழங்கிய ரூபாய் 112 லட்சம் நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவின் மருமகனான உபுல் சமிந்த குமாரசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பிணை மற்றும் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதனுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.