அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம்(காணொளி)

256 0

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் இன்று காலை 8.00மணி தொடக்கம் முற்பகல் 12.00மணி வரை பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இன்று காலை சிகிச்சைகளுக்காக வருகைதந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், குழந்தைகளுடன் சிகிச்சைபெறுவதற்காக வைத்தியசாலைக்கு வருகைதந்தபோதும் வைத்தியர்கள் இல்லாத காரணத்தால் திரும்பிச்சென்றதை அவதானிக்க முடிந்தது.